×

தறிகெட்டு ஓடிய சொகுசு கார் முதியவர் மீது மோதி விபத்து

அம்பத்தூர்: அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மாயவன் (57). இவர், நேற்று அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அத்திப்பட்டு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்து சொகுசு கார், மாயவன் மீது மோதிவிட்டு, சாலையோரமாக இருந்த சுவர் மீது மோதி கார் நின்றது. இதில் காயமடைந்த மாயவன், அலறி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர், மாயவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், கார் மற்றும் அதை ஓட்டிவந்த வாலிபரை சிறைபிடித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் காரை ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரித்தார். அதில், அம்பத்தூர் அத்திப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்த ஜான்சன் (30) என்பதும், தனியார் நிறுவன ஊழியரான இவர், மது போதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. போலீசார் அவரது ஓட்டுநர் உரிமத்தை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

The post தறிகெட்டு ஓடிய சொகுசு கார் முதியவர் மீது மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Mayavan ,Ambattur Telephone Exchange ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...